மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர்கள், மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மீன்வள மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதனையடுத்து மீனவர்கள் குறிப்பிட்ட வகையான மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் […]
