தலையணை நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்ததால் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள 5 வது வார்டு பகுதியில் மகபூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தலையணை, பஞ்சு மெத்தை ஆகியவை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தின் பணியாளர்கள் வழக்கம்போல பஞ்சுகளை கடையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தீப்பொறி பட்டு பஞ்சுகள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக […]
