பக்தர்களுக்கு வீட்டிலேயே பிரசாதம் வரும் வகையில் தபால் மூலம் பஞ்சாமிர்தத்தை அனுப்பி வைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி கோவிலில் பிரசாதம் என்றால் புகழ்பெற்றது பஞ்சாமிர்தம் தான். பழனி கோவிலில் விபூதி, சந்தனம், என பல பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குவது இந்த பஞ்சாமிர்தம். பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தற்போது பக்தர்களின் வசதிக்காக தபால் மூலம் விற்பனை […]
