பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கிட்டத்தட்ட மூன்று கிலோ ஹெரோயின் போதை பொருள் கடத்தப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளின் அத்துமீறல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் அங்கிருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. பஞ்சாப் எல்லை வழியாக அடிக்கடி இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி வழியாக பாயும் ராவி ஆற்றின் எல்லையில் பாதுகாப்பு படையினர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகிக்கும் […]
