கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் நகராட்சியை பசுமை ஆக்குவோம் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. நேற்று புகழூர் நகர மன்ற தலைவர் சேகர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் 1900 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி வாகனம் மூலம் வெளியேற்றினர். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
