சிவகங்கை திருப்புவனம் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமன் தலைமையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கோவில் […]
