மகா சிவராத்திரி தினத்தன்று, ராமநாதசுவாமி கோவிலில் பகல், இரவாக நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர் . ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவின் 5வது நாளான நேற்று சுவாமியும் ,அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியானது நடந்தது. 6வது நாளான இன்று இரவு 8 மணியளவில் சுவாமியும், அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ,திருவீதி உலா வரும் நிகழ்ச்சியானது […]
