ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]
