பிரிட்டனில் சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு கொடுத்த முன்னுரிமைகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டன் பைசர் மற்றும் மாடர்னா என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டன் அரசாங்கம் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை முன்பதிவு செய்து கொள்வதற்காக 119 என்ற தொலைபேசி எண்ணையும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் […]
