நேஷனல்ஹெரால்டு பணமோசடி வழக்கு குறித்த விசாரணைக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பவன்குமாா் பன்சால் அமலாக்கத்துறை விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜரானதாக அதிகாரிகள் கூறினர். மத்திய தில்லி பகுதியிலுள்ள அமலாக்கத்துறையின் புதிய தலைமை அலுவலகத்துக்கு இவ்வழக்குக்குத் தொடா்புடைய பெரும்பாலான ஆவணங்களுடன் காலை 10:30 மணிக்கு அவா் ஆஜரானாா். இதற்கிடையில் விசாரணையின் போது அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கு முன்பாக இந்த பணமோசடி வழக்கு பற்றி காங்கிரஸ் […]
