உத்திரபிரதேசம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவும் புதிய பயணத்தை தொடங்கியது. மேலும் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நாடு சொந்த காலில் நிற்க நிறைய பணிகள் நடைபெற்றது. ஆனால் அதற்கு நிறைய நேரம் வீணானது. நாடு நிறைய நேரத்தை இழந்துள்ளது. 2 தலைமுறைகள் சென்றுவிட்டன. தற்போது நாம் ஒவ்வொரு தருணத்தையும் தவறவிடக்கூடாது. […]
