ஆளுநரின் கருத்து குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டை பற்றி கூறுகிறோம். இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம், வளர்ச்சி அடைவதை போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் […]
