திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த கனமழையால் உப்பிலியபுரம் மின்னல் தாக்கி 50 நெல் மூட்டைகள் எரிந்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருச்சி நகரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், மலைக்கோட்டை தில்லைநகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியிலிருக்கும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. […]
