பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் அருகே மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய […]
