திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். சம்பா மற்றும் தாளடி நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து […]
