சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் […]
