மனைவி திரும்பி வராததால் விரக்தியடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள வி.நகரில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். நெசவுத்தொழிலாளியான இவருக்கு பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரபா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே பத்மநாபன் பல்வேறு முறை பிரபாவை தன்னுடன் வாழவருமாறு அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வாழ்வில் […]
