நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரம் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தூர்-ஈரோடு சாலையில் உள்ள பழனியாண்டவர்புரம் பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நூல் மில்லில் கழிவுப் பஞ்சு எந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து எந்திரத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த நூல் […]
