இலவச வேட்டி சேலைக்காக வழங்கப்படும் நூலின் தரத்தை என் தர சோதனை செய்வதில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசால் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதை தடுக்கும் வகையில் நூலின் தரத்தை சோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்க கோரி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் திரு. கோவிந்தராஜ் என்பவர் மனு […]
