அனைத்துப்பள்ளிகளிலும் நூலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை, தனி அறை ஒதுக்குதல் அவசியம். போதிய புத்தகங்கள் இல்லாவிட்டால், பிற நூலகங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும். தமிழ், ஆங்கில நாளிதழ்களை காலை, மாலை, உணவு இடைவேளை நேரத்தில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஒரு புத்தகத்தை படித்து […]
