தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர் பட்டதாரி வாலிபர் குறித்த தகவல்களை கேட்டு கொண்டார். அப்போது தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர் மறுமுனையில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து […]
