Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை பறிக்க சென்ற பெண்…. கொடூரமாக தாக்கிய காட்டெருமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே அம்மனட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நரிக்குழி ஆடா பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் தேயிலை கொண்டிருந்தனர். அப்போது நடராஜன் ஜெயலட்சுமியை மருந்து தெளிக்கும் எந்திரத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் நடராஜன் சந்தேகமடைந்து ஜெயலட்சுமியை தேடிச் சென்றுள்ளார். அப்போது ஜெயலட்சுமி பலத்த காயங்களுடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மோசடி…. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

இணையதளத்தில் மோசடி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான இணையதள மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் மாணவர்களிடம் பேசினார். அதாவது, வேலைவாய்ப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த குறுஞ்செய்தி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூத்துக்குலுங்கும் காப்பி செடிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காப்பிச் செடிகள் சாகுபடிக்கு  தயாராகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் சாகுபடி விவசாயிகளின் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காப்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு அரபிக்டா, ரோபஸ்டா என்ற 2 வகை காப்பிச் செடிகள் பயிரிடப்படுகிறது. இவை  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யப்படும். இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால் காபி சாகுபடியை நினைத்து விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 1 வாரமாக மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில்‌ ஏ.டி.சி திடல் அமைந்துள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. வட மாநில தொழிலாளி கைது…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா செடிகளை பயிரிட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையை முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல்துறையினர் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தொழிலாளர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகளை அச்சடித்தது எப்படி?…. ஊட்டி உரிமையாளரிடம் விசாரணை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

சட்ட விரோதமாக கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரத்தை தயார் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட குற்றத்திற்காக காங்கிரஸ் கட்சி  பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தாமஸ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் கோடை சீசன்…. அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்….!!

கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இங்கு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டியில் இருக்கும் அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இதில் கள்ளிச்செடிகள், பெரணி இல்லம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா போன்றவை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த் திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…. திரளானோர் சாமி தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே காந்திநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி வருடாந்திர தேர்த்  திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள், மகா கணபதி ஹோமம், அம்மன் சிறப்பு ஹோமம், கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் […]

Categories
அரசியல்

இயற்கை விவசாயம்…. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட…. இந்த கதையை படிங்க….!!!!

விவசாயிகள் அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி மலை காய்கறிகளை சாகுபடி செய்து வரும் நிலையில் நீலகிரியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் தனது 78 வயதிலும் தனியாக இயற்கை விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். மலையின் ரம்யத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் அழகிய நகரம் நீலகிரி. மேகங்கள் தவழும் இந்த நிலத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் மண்ணிற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அதிக லாபம் ஈட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்….. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளானோர் சாமி தரிசனம்…!!

விநாயகர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஏப்ரல் மாத வருடாந்திர புதிய கணக்கு தொடங்குவதை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வரவு-செலவு புத்தகங்களை சாமியின் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலைப்பிரதேசங்களில் சதமடித்தது…. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…. அரசுக்கு கோரிக்கை…!!

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. இங்கு பெட்ரோல் லிட்டருக்கு 106.63 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 13 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 109.65 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 99.38 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள்…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…. போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு…!!

எல்லைப் பகுதிகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள  வைத்திரி, முத்தங்கா, சுல்தான், பத்தேரி, வயநாடு போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்களை மிரட்டி அரிசி, பருப்பு போன்ற பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இவர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது, துண்டு பிரசுரங்கள் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவோயிஸ்டுகள் தமிழக-கேரள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!!

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிகளில்  வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரத்  தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் 9 காட்டு யானைகள் புகுந்துள்ளது. இவை ரன்னிமேடு, காட்டேரி, கரும்பாலம் பில்லி மலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருந்தது. இந்நிலையில் கிளிண்டல் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. பறிமுதல் செய்த போலீஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

கஞ்சா செடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையில் முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல் துறையினர் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்கள்…. செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்…!!!

வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இங்கு வண்ண வண்ண மலர்கள் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் பல நிறங்களில் பூத்து குலுங்குகிறது. இந்த பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை பார்த்து ரசிக்கின்றனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களின் அருகில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கிலாந்தில் நாட்டிலிருந்து பரிசு பொருட்கள்…. “73 லட்ச ரூபாயை இழந்த எஸ்டேட் உரிமையாளர்”…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி….!!!!

மூதாட்டியிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 67 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நபர் தான் இங்கிலாந்தில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் மூதாட்டியிடம் எனது மகள் உங்களுக்கு பரிசு அனுப்ப விரும்புகிறாள் என கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி குழந்தையிடமிருந்து பரிசுகளைப் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுங்க” தென்படும் அரியவகை பறவைகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

அரியவகை பறவைகளை பாதுகாக்க வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்கு அரியவகை பறவைகள் இருக்கின்றது. இந்த பகுதிக்கு அயல்நாடுகளில் இருந்தும் பறவைகள் வரும். இவை இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லும். இந்த பகுதியில்  பிளாக் டிராங்கோ என்ற அரியவகை பறவை பூக்களில் இருந்து தேனை உட்கொள்ளாமல் நேரடியாக தேன் கூட்டிலிருந்து தேனை உட்கொள்ளும். இந்தப் பறவை தன்னைவிட பெரிய பறவைகளுடனும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!!!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் சிலர் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு கன்னேரிமுக்கு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் சிலர் சூதாட்டம் விளையாடுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வீட்டிலிருந்த‌ 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊட்டியை சேர்ந்த குருமூர்த்தி, கோத்தகிரியை சேர்ந்த சிவா, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தீராத நெஞ்சுவலி” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இந்திரா நகர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் காளியப்பனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் பயனளிக்காததால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் தேங்கிய குப்பைகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….. 1 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்….!!!!

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும்  பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் கோடப்பந்து கால்வாய் பிரதான கால்வாயாக  அமைந்துள்ளது. இந்த பகுதியில் கனமழையின் போது பெருக்கெடுத்து வரும் வெள்ளம் ஊட்டி ஏரியில் சேருகிறது. இந்த கால்வாயில் ‌கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் கால்வாயை பராமரித்து வரும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதையறிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் அரசியான ஊட்டியில் பசுமையான புல்வெளிகள் தேயிலைத் தோட்டங்கள் மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டங்கள் என இயற்கை அழகு ஜொலிக்கிறது. இந்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சினிமா படப்பிடிப்புகளும் அதிகமாக நடைபெறும். இதற்காக சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு கட்டணத்தின் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக இந்த பகுதிகளில் சினிமா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“திடீரென வீசிய துர்நாற்றம்” அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தைகள்…. அதிர்ச்சியில் வனத்துறையினர்…!!!

வனப்பகுதிக்குள் சிறுத்தைகள் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் வனச்சரகர் சிவா தலைமையிலான ஒரு குழு வனப்பகுதிக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 சிறுத்தைகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர்  உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வன அலுவலர் சச்சின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!… டாஸ்மாக் கடையில் தரமற்ற மது விற்பனை….!!!!

மதுக்கடையில் தரமற்ற மது விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே மண்வயல் பகுதியில் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் மது வாங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அவர் பாட்டிலை திறந்து மதுவை குடிக்கும் போது அதில் வெங்காயம், புகையிலை போன்றவைகள் கிடந்துள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை. மேலும் மதுவின் விலையை உயர்த்திய யதோடு தரமற்ற மதுவையும் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணின் தலையில் பேன் பார்த்த குரங்கு…. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

குரங்கு ஒன்று பெண்ணின் தலையில் பேன் பார்த்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதி மலைப்பிரதேசம் ஆகும். இங்கு  குரங்குகள் வரவு  அதிகரித்துள்ளது.  இவை குடியிருப்புகளில் புகுந்து வீடுகளில் இருக்கும் உணவுப் பண்டங்களை நாசம் செய்து வருகிறது. இதில் சில குரங்குகள் பொதுமக்களிடம் இயல்பாக பழகி வருகிறது. இந்நிலையில் கக்குளா கிராம பகுதியில் ஒரு பெண் வீதியில் நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் தோளில்  மீது ஒரு குரங்குக்குட்டி அமர்ந்து கொண்டு தலையில் பேன் பார்த்துள்ளது. இதைப்பார்த்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாரைப்பாம்பும், நாகப்பாம்பும் ஆடிய நடனம்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் தென்மண்டல தேயிலை தோட்ட வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றி ஏராளமான மரம், செடி, கொடிகள் புதர்கள் உள்ளது. இந்நிலையில் தோட்டப்பகுதிக்குள்  சாரை பாம்பு ஒன்று அங்குமிங்குமாக ஊர்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நாகப்பாம்பும் அந்த இடத்திற்கு வந்தது. இந்த 2 பாம்புகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு நடனம் ஆடியது. இதைப்பார்த்து அச்சமடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுயானைகள் அட்டகாசம்…. அவதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் கண்காணிப்பு….!!

காட்டுயானைகளின் அட்டகாசத்தினால் கிராமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு சரக வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் அவ்வப்போது ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ரன்னிமேடு, கிளிண்டல் போன்ற பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களை சுற்றி முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானைகள் கரும்பாலம் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. இதில் 2 குட்டிகளுடன் கூடிய ஒரு காட்டு யானை சின்னகரும்பாலம் அருகே முகாமிட்டுள்ளது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேறு பெண்ணை திருமணம் செய்த கணவர்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து  தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகே கேத்தி பாரதி நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை  சேர்ந்த புஷ்பநாதன் என்பவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் புஷ்பநாதன் திருமணமான 2 மாதத்தில் வினோதினியை தாய் வீட்டில் விட்டுவிட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பி வரவே இல்லை. தற்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவி…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பேசினார். அதாவது, அரசு கல்லார் தோட்டக்கலை பண்ணையில் தேனி பயிற்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 50 கிராம் கஞ்சா பறிமுதல்….. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த விக்டர் சாந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விக்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!!

மரங்களை கடத்த முயற்சி செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மானூர் கிராமத்தில் மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி உதவி வன அலுவலர் சர்மிலி, வனவர்‌ ஆனந்த், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 2 சில்வர் ஓக் மரங்களும், 4 பூ மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த மரங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேளாண்மை வணிகம்…. சிறப்பு பயிற்சி முகாம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

வேளாண்மை வணிகம்  குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் ரோஜா பூங்கா அருகே துறை அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் சிறப்பு முகம் அமைக்கப்பட்டது. இதற்கு விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் ஜாய்லைன் சோபியா தலைமையேற்றார். இவர் விலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இதனையடுத்து ஒருங்கிணைந்த வேளாண்மை சந்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. புதிய பள்ளி கட்டிடம் அமைத்துத்தர வேண்டும்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரசு பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அதாவது கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 45-க்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த காட்டுயானைகள்…. அச்சத்தில் கிராமமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே புஞ்சைகொல்லி கிராமத்தில் ஏராளமான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் பதுங்கினர். இதனால் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை. வாழை மரம், பாக்கு மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி…. திரளானோர் பங்களிப்பு….!!

சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் முப்படை தலைவர் பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் மரியாதை செலுத்துதல், பொது மக்களிடம் மனுக்கள் பெற்று முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் தீர்வு காணுதல் போன்ற புகைப்படங்கள் இருந்தது. மேலும் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு ராணுவத்தினர் விருது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிகள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

கார் மோதிய விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் ஊட்டியிலிருந்து கூடலூர் வழியாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது மோதியது. இந்த விபத்தில்  11-ஆம் வகுப்பு மாணவிகளான அனுஜா, ஹேமா, நாகவள்ளி, சசிகலா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம்…. பேருந்து, வங்கி சேவைகள் முடக்கம்…. அவதியில் பொதுமக்கள்….!!

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பேருந்து மற்றும் வங்கி சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வருதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு பொருட்கள் மீதான விலையை குறைக்க வேண்டும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தல்  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு, எல்,பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் ஈடுபட்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…. நீலகிரிக்கு குவியும் மக்கள்….!!

இயற்கை வளங்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. இதில் கோடநாடு காட்சி முனையும் ஒன்று. இந்தப் பகுதி கடல்மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் காட்சிக் கோபுரம் மற்றும் தொலைநோக்கு கருவி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமவெளிப் பகுதியில் இருக்கும் பவானிசாகர் அணை, பவானி ஆறு, மேட்டுப்பாளையம், கொங்குமரஹடா கிராமம் ரங்கசாமி மலைச்சிகரம் மற்றும் அதிலுள்ள நீர்வீழ்ச்சி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு…. அதிகாரிகளின் நடவடிக்கை…. 38 ஏக்கர் நிலம் மீட்பு…!!

நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் ஏரளமான  நீர்நிலைகள் உள்ளது. இந்த பகுதிகளை  ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளனர். இந்தப் பகுதிகளில் இருக்கும் கால்வாய்கள் மற்றும் நீரோடைகளில் இருக்கும் நிலங்கள் வருவாய் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வருகிறது.‌ அதாவது நீர் நிலைகளில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு இருக்கும் நிலங்களை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரைவீரன் காலனி, பிங்கர் போஸ்ட், ஆடோ சாலை, குன்னூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள்…. அச்சத்தில் கிராமமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே பூஞ்சைகொல்லி குழிவயலில் ஆதிவாசி காலனி உள்ளது. இந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடிசை வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இது மட்டுமில்லாமல் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் குடிசை வீடுகளை சேதப்படுத்துகிறது. எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தருமாறு அதிகாரிகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டுயானை…. 4 வீடுகள் சேதம்…. அச்சத்தில் கிராமமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சின்ன சூண்டி குரும்பர் பாடியில் புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிவாசி மக்கள் பயந்து போய் வீடுகளுக்குள் பதுங்கினர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகளை சூழ்ந்து கொண்டு 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை…. 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்…. வழக்கு ஒத்திவைப்பு…!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு பகுதியில் நெஞ்சை பதற வைக்கும் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் உதயகுமார், ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, பிஜின், சம்சீர் அலி, சதீசன், திபு, மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ‌ இந்த வழக்கில் தொடர்புடைய சயான் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

 அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் கன்டோன்மென்ட் போர்டு நிறுவனம் அமைந்துள்ளது. இந்த பகுதி இராணுவ முகாம்களை ஒட்டி அமைந்துள்ளது.  இந்தப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற்ற பிறகே கட்ட வேண்டும். இந்நிலையில் சின்னவண்டி சாலை, குர்கா கேம்ப், பாய்ஸ் கம்பெனி, கேட்டில் பவுண்ட் போன்ற பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 10 கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளில் புகுந்த மழைநீர்…. சிரமப்படும் மக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கழிவுநீர்க் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இருக்கும் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ளிட்ட பல பகுதிகளில்  பலத்த கனமழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருக்கும் 10 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்தப் பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தகவலை அறிந்த நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின், துணை தலைவர் வாசிம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“முதுமலை-மசினகுடி” புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை-மசினகுடி செல்லும் சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதாவது முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மான்கள், காட்டெருமைகள் போன்றவைகள் உணவு தேடி அலைகிறது. இதன் காரணமாக மசினகுடி-முதுமலை சாலையில் செல்கின்றது. இந்த வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக புலிகளும் அந்த பாதையில் செல்கிறது. இந்நிலையில் சில  தினங்களுக்கு முன்பு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள்…. நீதிமன்றத்தின் உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீர்நிலை பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் அமைந்துள்ளது. இந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக காவிலோரை கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விவசாயிகள் சாகுபடி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்டதால் அறுவடை முடிந்தவுடன் அகற்றுகிறோம் என்று கோரிக்கை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பிறகு நகர்மன்ற கூட்டம்…. 86 அம்ச திட்டங்கள்…. சிறப்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு வாடகை பிரச்சினைகள் சரி செய்யப்படும் என ஆணையாளர் உறுதி அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில்  நகர்மன்ற கூட்டரங்கம் அமைந்துள்ளது. இங்கு நார்மன்ற கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 86 திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஊட்டியில் அமைந்திருக்கும் மார்க்கெட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல கடைகள் சீல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில்…. “அழகாக பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்”…. ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரிமாவட்டம்,  கோத்தகிரியில் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்களைப் பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள், செடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் என்று நிறைய  காணப்படுகின்றது.  இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது பல்வேறு நாடுகளிலிருந்து அரிய வகை மலர்கள், செடிகள் கொண்டு வந்து நடவு செய்துள்ளனர். இங்கு சாலையோரங்களில் வளர்க்கப்பட்டு வரும் அழகுமிக்க மரங்களில் ஜெகரண்டா மரமும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது . இந்த ஜெகரண்டா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தாய்ப்பாலிற்கு” பதிலாக மதுபானம்…. பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரத்தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குழந்தைக்கு தாய் மதுபானம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி வண்ணார்பேட்டை பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவர் இருக்கிறார். இவர் கோவையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நித்திஷ் (3), நித்தின் (1) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கீதா கார்த்திக்கை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 18-ஆம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பூக்குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புள்ளி மானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலி… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

முதுமலையில் புள்ளி மானை வேட்டையாடி புலி தூக்கிச் சென்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய், மான் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் இரையைத் தேடி சாலையோரத்தில் நடமாடி வருகின்றது. இப்படி சாலை ஓரத்திற்கு வருகின்ற வனவிலங்குகளை வேட்டையாட புலி, சிறுத்தை புலிகள் வருகின்றது. அதன்படி […]

Categories

Tech |