Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்….. ஆவேசமடைந்த காட்டு யானைகள்…. பெரும் பரபரப்பு…!!

சுற்றுலா பயணிகளை காட்டு யானைகள் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 9 காட்டு யானைகள் உலிக்கல், பில்லிமலை,  காட்டேரி, மரப்பாலம், பர்லியார் போன்ற இடங்களில் சுற்றித்திரிகிறது. இந்நிலையில் ரன்னிமேடு பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டேரி பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் இருந்தனர். இவர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. களைகட்டியது நீலகிரி…!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இதனால் மற்ற இடங்களைவிட ஊட்டியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வருகை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்….. போலீஸ் விசாரணை….!!

பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே சளிவயல் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பூட்டிக்கிடந்த ஜெகதீசன் வீட்டிற்குள் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து கூடலூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காருக்குள் கிடந்த பிணம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கொத்தனார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாட்டவயல் அருகே நூல்புழா பகுதியில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் பிணமாக காருக்குள் கிடந்துள்ளார். உடனே காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பணியின் போது உயிரிழந்த வீரரக்ள்….. அஞ்சலி செலுத்திய தீயணைப்புத் துறையினர்….!!

வேலையில் இருக்கும் போது உயிரிழந்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தீயணைப்பு நிலைய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வேலையின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தீயணைப்பு வீரர் ஜெகதீஷ் கலந்து கொண்டு உயிரிழந்த வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த வாரம் முழுவதும் தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது, தீயணைப்பு சாதனங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆதிவாசி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள்….. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

ஆதிவாசி மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே போஸ்பாரா பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதிவாசி மக்களிடம் முதியோர் ஓய்வூதியம், சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் களுக்கான சான்றிதழ்களை அதிகாரிகள் பெற்றனர். இந்த கூட்டத்தில் கிராம உதவியாளர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷரீப், வருவாய் ஆய்வாளர் உமா உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் இறந்து கிடந்த எலி…. 3 பேருக்கு மூச்சுத்திணறல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

சுத்தம் செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கிய நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே பள்ளிப்பாடி பகுதிகயில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணற்றில் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இந்த எலியின் உடலை ராமச்சந்திரன் கிணற்றிலிருந்து அகற்றியுள்ளார். இதனையடுத்து கிணற்றை சுத்தம் செய்வதற்காக மோகன் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அதன்பிறகு பெட்ரோல் மோட்டார் மூலமாக கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெளியேறிய புகை மூட்டத்தினால் மோகனுக்கு மூச்சுத் திணறல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்….. அதிர்ச்சியில் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

மர்ம நபர்களால் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே நெலாக்கோட்டை கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணப்பயிர்களை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரன் தனது வீட்டிற்கு முன்பாக ஸ்கூட்டரை நிறுத்தி வைத்துள்ளார். இந்த ஸ்கூட்டருக்கு திடீரென மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து நெலாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆதிவாசி கிராமங்கள்….. திடீரென ஆய்வு மேற்கொண்ட போலீஸ்…..!!

ஆதிவாசி கிராமங்களில் திடீரென காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்குப்பாடி, மாங்கால், கொட்டாடு, பாட்டவயல் உள்ளிட்ட கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டிருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் அம்பலமூலா காவல்துறையினர் ஆதிவாசி கிராமத்திற்கு சென்றனர். இவர்களைக் கண்டவுடன் அப்பகுதி குழந்தைகள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் படிப்பின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே புகுந்த காட்டுப்பன்றி…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மொபட்டில் இருந்து தவறி விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கேர்கம்பை‌ கிராமத்தில் நிகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜானகி என்பவருடன் சேர்ந்து மொபட்டில் நெடுகுளா கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் செல்லும் வழியில் திடீரென சாலையின் குறுக்கே ஒரு காட்டுப்பன்றி வந்துள்ளது. இந்த காட்டுப்பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக நிகில் மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென மொபட் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நிகில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்கா….. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது…..!!

கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட  சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து கழகம் முன்பாக ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மண்டலத் தலைவர் செபாஸ்டின் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் அமர்ந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்‌. இதனையடுத்து திருச்சி மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும்  நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்பிறகு போக்குவரத்து பணிமனைக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தமிழ் புத்தாண்டு தினத்தில்….. ஊட்டியில் குதிரை பந்தயம்…. வெளியான முக்கிய தகவல்….!!

குதிரை பந்தயம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம் ஒரு வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக நடைபெறவில்லை. கடந்த வருடம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி குதிரை பந்தயம் நடைபெற்றது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  பந்தயம் நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்துள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு செய்து தாருங்கள்….. ஆதிவாசி மக்களின் கோரிக்கை….!!

ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கோட்டைமேடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 5 குடும்பங்களுக்கு மட்டும் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 5 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் 10 வீடுகளுக்கும் மின் இணைப்பும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதிய முறையில் குறுமிளகு உற்பத்தி…. ஒரே செடியில் 40 நாற்றுகள்….!!

புதிய முறையை பயன்படுத்தி குறுமிளகு நடவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இதனையடுத்து நெல், நேந்திரன் வாழை, பாக்கு மற்றும் மலை காய்கறிகள் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு இணையாக விவசாயிகள் காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்களும் விளைகிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. இந்நிலையில் கூடலூர் தோட்டக்கலைத்துறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு….. நீதிமன்றத்தின் உத்தரவு…. அகற்றும் பணியில் அதிகாரிகள்….!!

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி நீலகிரி மற்றும் கோத்தகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்டட்டி கிராமத்தில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், பாபு மற்றும் பழனிச்சாமி உள்பட சில அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடமாடிய காட்டெருமை…. செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

காட்டெருமையின் நடமாட்டத்தினால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் கரடி, காட்டெருமை, காட்டு யானைகள், சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் குன்னுர் சாலையில் காட்டெருமை ஒன்று நடனமாடிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த மாணவ – மாணவிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். ஆனால் சில சுற்றுலாப் பயணிகள் காட்டெருமையுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதனால் காட்டெருமை சற்று மிரண்டது. உடனே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ராம நவமி பூஜை…. சிறப்பாக நடைபெற்ற ஊர்வலம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலையை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த ஊர்வலம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வு…. அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம்  ஊட்டியில் உள்ள  நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர்  கருப்பு உடை அணிந்து கொண்டு வந்தனர். இவர்கள் திடீரென தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு கூட்டத்தையும் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னுர் – மேட்டுப்பாளையம்…. சாலை விரிவாக்க பணிகள்…. நீதிபதிகள் ஆய்வு…!!

சாலை விரிவாக்க பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்தப் பாதைகள் மிகவும் குறுகி காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டுயானை…. பீதியில் கிராம மக்கள்….. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செலுக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள், மாணவ-மாணவிகள், கிராம மக்கள் என பலரும் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாக்கள்….. மகிழ்ச்சியில் தாரை தப்பட்டை கலைஞர்கள்….!!

கோவிலில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் தாரை தப்பட்டை கலைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் திருவிழாக்கள் நடைபெறும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் கோவில்களில் திருவிழாக்கள் கலை கட்டியுள்ளது. இதனால் மேளம், தாரை தப்பட்டை கலைஞர்கள், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள்…. பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்….!!!

பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார் போல் பூக்கள் பூக்கும். தற்போது கோடைகாலம் மலர்களான குன்றை பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த மலர்களின் சிறப்புகள் சங்ககால இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த சித்திரை விஷு திருவிழாவில் கொன்றை மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இந்தத் திருவிழாவை முன்னிட்டு மலர்களின் விற்பனை அமோகமாக நடைபெறும். மேலும் பூத்துக் குலுங்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பைக்காரா அணையில் படகு சவாரி…. குவியும் சுற்றுலா பயணிகள்…. கலை கட்டியது கோடை சீசன்….!!!

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும்,  வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கிருக்கும் ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுவதால் மற்ற இடங்களை விட இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற  பைக்காரா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்த படகு சவாரியின் போது இயற்கை அழகை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் நெகிழி  பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், வனவிலங்குகளின் நலனுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக வனப்பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 28 மது பாட்டில்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குஞ்சப்பனை சோதனைச் சாவடிக்கு அருகில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் கேரடாமட்டம் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது கையில் இருந்த பையை வாங்கி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் மது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வலிப்பு நோயால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக முருகன் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் முருகன் திடீரென மருத்துவமனையில் விட்டு வெளியே வந்துள்ளார். இவர் வரும் வழியில் ஊட்டி கூட்ஷெட் சாலையில் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த கோடை மழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

கோடை மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதை சுற்றியுள்ள மஞ்சூர், எமரால்டு, முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் எருமாட்டு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்தது. இதனையடுத்து பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறும். இந்நிலையில் கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவில் கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் தலைமையேற்று நடத்தியது. இந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதன்பிறகு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூண்டு அறுவடை…. கொள்முதல் விலை சரிவு…. காலம் தாழ்த்தும் விவசாயிகள்….!!

விலை சரிவின் காரணமாக  விவசாயிகள் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை விவசாயம் விவசாயிகளின் மூல தொழிலாக உள்ளது. இதனையடுத்து உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு போன்ற மலை காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சில விவசாயிகள் புரூக்கோலி, ஐஸ்பெர்க் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளையும் விளைவிக்கின்றனர். இங்கு விளையும் பூண்டு நல்ல காரத்தன்மை கொண்டதாகவும், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த கட்டண உயர்வு…. கவலையில் சுற்றுலா பயணிகள்….!!!

கோடை சீசனை முன்னிட்டு ஹோட்டல்களில் வாடகை கட்டணம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் தங்கியிருந்து சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு நாள் அறை கட்டணம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. போலி அரசு அதிகாரிகள் கைது…. பெரும் பரபரப்பு….!!

போலி அரசு அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே ஓரசாலை கிராமத்தில் மனோ, சிவராம் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் டாண்பாஸ்கோ நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்றுக் கொண்டிருந்தனர். இவர்களிடம் மனோ மற்றும் சிவராம்  அரசு அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து பணம் தரும்படி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் எந்திரங்கள்…. நீதிபதிகள் ஆய்வு….. அதிகாரிகளுக்கு உத்தரவு….!!

வனப்பகுதிகளில்  நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர் நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளங்களுக்கு ஏற்ற இடமாகவும், வனப்பகுதிகள் நிறைந்தும் காணப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகள் கூடும் முக்கிய இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான சதீஷ்குமார், சுப்பிரமணியன், இளந்திரையன், பொங்கியப்பன் தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இவர்கள் ஏடிஎம்களில் தண்ணீர் சரியாக வருகிறதா என்றும், தண்ணீரை குடித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசன் களைகட்டியது…. நீலகிரியில் குவியும் சுற்றுல்லா பயணிகள்…. நியமிக்கப்பட்ட கூடுதல் காவலர்கள்….!!

பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கிருக்கும் ஊட்டியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும் அவதி அடைகின்றனர். இந்தப் போக்குவரத்து ஒழுங்கு கட்டுப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதாவது கோவை மாவட்டத்தில் இருந்து 35 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திருவிழா நடத்த கட்டுப்பாடுகள்…. தடை விதிக்கும் அதிகாரிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை வசந்த காலம் நிலவுகிறது. இந்த நேரத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் கூடலூர் பகுதியில் இருக்கும் கோயில்களில் திருவிழா நடத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கநல்லா சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 கிலோ இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரத்தின், சல்மான், சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் மயங்கி கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி செல்வபுரம் பகுதியில் பாலசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ‌ கூடலூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர்த்  திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மனை மலர்களால் அலங்காரம் செய்து தேரில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. சாலை பணியாளர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோட்ட பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் 41 மாத பணி நீக்கத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் எனவும், நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவேண்டும் எனவும், கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கும் சாலை தொழிலாளர் பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சாலை தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள்…. வியாபாரிகள் ஆர்வம்….!!!!

ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் விலை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து 90 சதவீதம் தேயிலைத்தூள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இங்கு பொருளாதார சரிவு காரணமாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் அதிகமான அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

ரேஷன் கடைகளில் இனி பொதுமக்களுக்கு பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படுவதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான  மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் சக்ரபானி அளித்த பதிலில் கூறியதாவது, அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இடத்திற்கு அனுப்பப்படும். மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆதிவாசி மக்கள்…. நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஐ.ஜி…..!!

ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே ஆதிவாசி குடியிருப்பு காலனி உள்ளது. இவர்களிடம் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி குறைகளை கேட்டறிந்தார். இவர் ஆதிவாசி மக்களுக்கு  இனிப்புகள் வழங்கினார். அதன்பிறகு 38 குடும்பங்களுக்கு தண்ணீர் சேமிக்கும் பிளாஸ்டி டேங்குகளை டிஐஜி வழங்கினார். இதனையடுத்து டிஐஜி முத்துசாமி ஆதிவாசி மக்களிடம் உங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமெனக் கூறினார். அதன் பிறகு குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் உங்களுடைய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனவிலங்குகள் வேட்டை…. காவலர் உள்பட 8 பேர் கைது…. வனத்துறையினர் நடவடிக்கை…!!!

சட்ட விரோதமாக காட்டுக்குள் வேட்டைக்கு சென்ற நபர்களை வனத்துறையினர்  கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள வயநாடு பகுதியில் இருக்கும் வனப்பகுதிக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிலர் வேட்டைக்காக சென்றனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது. இதில் ஒருவர் எருமாடு காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் என்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 82,500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட  விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கக்கனல்லா சோதனைச் சாவடியில் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு 82,500 ஆகும். இதை பறிமுதல் செய்த காவல்துறையினர்  லாரி ஓட்டுனர் மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகள்”…. சிறந்த காவல்நிலையம்…. காவலர்களுக்கு பாராட்டு…!!

சிறந்த காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்நிலையம்  சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகளை பராமரிப்பதில் சிறந்து விளங்குகின்றது. இந்நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி கூடலூர் காவல்நிலையத்தை ஆய்வு‌ செய்தார். இவர் காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதன்பிறகு போக்சோ சட்டங்களை திறமையாக கையாண்டு குற்றவாளிகளுக்கு மகளிர் காவலர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் இன்ஸ்பெக்டர் சசிகலா, சரோஜா, ராணி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பணம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேருக்கு மோதிய கார்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கார் விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் உள்ள கிருஷ்ணன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி  சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இவருடன் முரளி, சாந்தி ஆகியோரும் காரில் சென்றனர். இந்த கார் பாண்டியன் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் கண்ணனின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி கார் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே 21 இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்தும் நடக்கிறது. இந்நிலையில் குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் கண்ணன் உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கண்ணன் நீதிமன்றத்தில் ஊழியராகவும், உமாமகேஸ்வரி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் காரமடை பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்த காட்டுயானைகள்…. துரத்திய காட்டு யானைகள்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்…!!

காட்டுயானைகள் கூட்டமாக வாலிபர்களை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது இதன் காரணமாக வன விலங்குகள் உணவு தண்ணீர் இன்றி தவிக்கின்றது. இதனால் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி, ரன்னிமேடு, கிளிண்டன் எஸ்டேட் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில்‌ குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளின் மீது ஜீப் மோதல்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் அவருடைய நண்பர் ரூபன் ஆகியோர் கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தில் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் பைக்காரா பகுதி அருகே சென்ற போது அவ்வழியே வந்த ஜீப் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்….!!

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 112.29 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 102.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு செங்கலின் விலை 13 ரூபாயாகவும், எம் சாண்ட் மணல் 6,500 ரூபாயாகவும், ஆற்றுமணல் 8,000 ரூபாயாகவும், […]

Categories

Tech |