Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்க மட்டும் தான் போவீங்களா..? ரேஷன் கடைக்கு சென்ற கரடி… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: எரியும் டயரை வீசி கொலை – வனத்துறையினர் அதிரடி…!!

யானை மீது டயரை கொளுத்தி போட்டு கொலை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்றுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து அதை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையே குறிப்பிட்ட யானை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்த விசாரணையில் யானையானது தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனத்துக்கு பக்கத்தில் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் தங்களை காப்பாற்றி கொளவதற்காக டயரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரியும் டயரை வீசி கொலை – பரப்பரப்பு வீடியோ …!!

டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற மனிதர்கள்….” யானையின் மீது எரியும் டயரை வீசி”… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி..!!

யானை மீது ஏரியும் டயரை வீசிய பரபரப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பிடித்த வனத்துறையினர் யானையின் காதில் காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் கடந்த 19ஆம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். அந்த யானையை லாரியில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் பாட்டில் வீசி…. யானைக்கு தீ வைத்த நபர்கள்… நீலகிரி கொடூரம் அம்பலம் …!!

நீலகிரி மாவட்டத்தில் யானையின் மீது தீக்காயம் ஏற்படுத்தி உயிரிழக்க செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த 50 வயதுடைய யானை அடிக்கடி விவசாய நிலத்திற்க்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் யாரோ அந்த யானையின் மீது பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தீப்பற்ற வைத்துள்ளனர்.இதனால் யானையின் காதுகள் ரத்தம் வழிந்தபடி அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு நாள் கேப்…. மீண்டும் ஆரம்பித்த மழை…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்வதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு நாட்களுக்குப்பின்பு மீண்டும் மழை அச்சுறுத்துகிறது. மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இரண்டு நாட்களாக மழை பொழிவு நின்றிருந்த நிலையில் குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்…!!!!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தெப்பக்காடு யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு நெற்றியில் விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் பூசப்பட்டது. யானைகளுக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ராகி, கேழ்வரகு இனிப்பு பொங்கல், ஊட்டச்சத்து மாத்திரைகள், கரும்பு ,பழங்கள் அடங்கிய உணவுகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. விநாயகர் கோவிலில் வன அதிகாரிகள் வழிபாடு நடத்திய பின்னர் யானைகளுக்கும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் யானைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைக்குள் புகுந்து… காய்கறிகளை வேட்டையாடிய காட்டெருமை… அச்சத்தில் பொதுமக்கள்….!!

குன்னூரில் காட்டெருமை ஒன்று கடையில் புகுந்து காய்கறிகளை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் கடந்த 4 நாட்களாக  ஒற்றை காட்டெருமை தூதர்மட்டம் கடைவீதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக உணவு தண்ணீருக்காக ஊருக்குள்  புகுந்த காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில் ஊருக்குள் திரிந்த காட்டெருமை ஒன்று  திடீரென்று சாலையோரம் இருந்த காய்கறி கடைகளில் புகுந்து கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடும் குளிரால்…. வார்னிஷை நெருப்பில் ஊற்றி… குளிர் காய்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்… நீலகிரியில் பரபரப்பு….!!

வார்னிஷை தீயில் ஊற்றி குளிர் காய்ந்ததில் மூச்சு திணறி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இயல்பு நிலையைக் காட்டிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.அதன் காரணமாக அம்பிகாபுரத்தை சேர்ந்த கஜபதி என்பவர் தனது உறவினர்கள் கலாவதி, மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டிற்குள் தீயை மூட்டி குளிர் காய்ந்துள்ளார். அத்துடன் அவர் தீ நன்றாக எரிய வேண்டும் என்பதற்காக அவர் நெருப்பில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை… அச்சத்தில் பொது மக்கள்….!!

உதகமண்டலத்தில் குடியிருப்புகளுக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளிலிருந்து சிறுத்தை, புலி ,காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உதகமண்டலத்தில் மையப்பகுதியான கமர்சியல் சாலை பகுதியில் கடந்த சில நாட்களாக  நாய்கள் தொடர்ந்து  காணாமல் போயுள்ளது. காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு  கேமராவில்  பார்த்தபோது சிறுத்தைப்புலி ஒன்று நள்ளிரவில் குடியிருப்புகளுக்குள்  புகுந்து உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதைப்பார்த்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேரனின் மருத்துவ செலவுக்கான பணத்தை… தவற விட்ட முதியவர்… பணத்தை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினர்…!!

 நீலகிரி அருகே பணப்பையை தவற விட்ட முதியவரிடம் காவல்துறையினர் ஓப்படைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை  கிடந்ததுள்ளது. அந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரி என்ற பெண் காவலர் கண்டெடுத்துள்ளார்.  பின்னர் அதற்குள் பார்த்தபொழுது  2,27,000 ரூபாய்  இருந்ததுள்ளது. ஆனால் அதை தவற விட்டு சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ஊட்டி நகர மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனைவி குழந்தைகளை கொடூரமாக கொன்று விட்டு… தொழிலாளி தற்கொலை… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இங்கு  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அசோக் பகத் ஓரான்(27) என்பவர் தனது மனைவி சுமதி(24) மற்றும் தனது குழந்தைகள் ரேஷ்மா(4), அபய்(8) ஆகியோருடன் தங்கி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்… தமிழக-கேரள எல்லையில்… கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்…!!

தமிழக – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா தொடங்கி வட மாநிலங்கள்  உட்பட பல்வேறு  மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழக – கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு காடை, கோழி, வாத்து  போன்ற […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வு…2 புதிய நடைமுறைகள்… விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை…!!!

  தமிழகத்தில் குரூப்-1 தேர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேரும், பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பெரும், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 356 பேரும் மொத்தம்1016 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்தோடு சுற்றிய யானை….. கும்கி துணையோடு சிகிச்சை… மயக்க ஊசி செலுத்தப்பட்டது …!!

உதகையை அடுத்துள்ள பொக்காபுரம் குடியிருப்பு பகுதிக்குள் காயத்துடன் சுற்றித் திரிந்த ஒற்றை யானைக்கு, கும்கி யானைகளைக் கொண்டு மயக்க ஊசி செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் வனப் பகுதியில், ஒற்றை ஆண் யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. காயத்தை குணப்படுத்த பழத்திற்குள் மாத்திரைகளை வைத்து அளித்து, வனத்துறையினர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். காயமடைந்த யானை பொக்காபுரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என்னை திட்டினா நான் குதிச்சுடுவேன்”… குடிபோதையில்… புது மாப்பிள்ளையின் விபரீத முடிவு..!!

கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ரகுராம் கடந்த ஆகஸ்ட் மாதம் நர்மதா என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். ரகுராமிற்கு மது குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரகுராமிற்கும் நர்மதாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று  முன்தினம் மாலையில் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ரகுராம் மீண்டும்  தகராறு செய்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திட்டினால் தற்கொலை செய்து கொள்வேன்…கிணற்றில் குதித்த புதுமாப்பிள்ளை… கண்ணிமைக்கும் நேரத்தில் வாழ்க்கையே முடிந்தது…!!!

அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரகுராம் (20 வயது). ரகுராம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு நர்மதா எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ரகுராம் குடிப்பழக்கம் உடையவர். ஆகையால் கணவர் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரகுராம் குடித்து விட்டு வீட்டிற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

Flash News: விடுமுறை – அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!

ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டமானது அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகள்  வருடம் முழுவதும் வந்து செல்வது வழக்கம். மேலும் நீலகிரியில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. வருடந்தோறும் இந்த கோவிலில் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…. ஓடையில் தேடுதல் வேட்டை…!!

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதால் காவல்துறையினர் ஓடையில் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி என்ற சிறுமி சம்பவத்தன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானையை நோட்டமிட்ட புலி சுற்றுலா பயணிகள் பீதி …!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலையில் யானையை படம்பிடிக்கும் போது யானையின் பின்னால் புலி இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு சாலையோரத்தில் நின்று இருந்த யானையைப் படம் பிடித்த சுற்றுலா பயணிகள், அதை படம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தந்தையின் இரண்டாவது திருமணம்…. மன உளைச்சல் தாங்க முடியல…. மகன் எடுத்த முடிவு….!!

நீலகிரி அருகே +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்சித் குமார். இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் . பல வருடங்களுக்கு முன்பு சம்பத்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு  தனியாக வசித்து வந்தார். இதனால் சஞ்சித் குமார் அவரது தாயார் மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர்  தனியாக வசித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு… ஆத்திரத்தில் கிராமத்தினர்..!!

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே காட்டு யானை தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (48). அவரது மகன் பிரசாந்த் (20). கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு அவரது வீடு அருகே அவரது மகன் பிரசாந்தை காட்டு யானை தாக்கிவிட்டு ஆக்ரோஷத்துடன் வந்தது. அச்சமயத்தில் வீடு திரும்பிய கவுன்சிலர் ஆனந்தராஜையும் தாக்கியது. பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்… அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட, அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான முகவர்கள் (Life Insurance Agent) பணியிடங்களுக்கு, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளயாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட இருக்கின்றனர். நிறுவனம் : TN Postal Nilgiri பணியின் பெயர் : Life Insurance Agent கடைசி தேதி : 09.12.2020 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை கல்வித்தகுதி : 10ம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று முதல் அமல்… வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்திற்கும் பசுமை வரி உயர்த்தப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மேலும் சில மாவட்டங்களின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கனரக வாகனங்களுக்கு 100 ரூபாய், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு 70 ரூபாய், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படித்திருந்தா போதும்… உள்ளூரில் அரசு வேலை… விரைவில் முந்துங்கள்..!!

நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் காலியிடம்: 28 கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் மற்று தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணினிகளை இயக்க தெரிந்திருக்கவேண்டும். மாத ஊதியம்: ரூ.9000 இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது புகைப்படம் அடங்கிய முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை 30.11.2020 க்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/Nilgiris-DCPU-Assistant-Cum-Data-entry-operator-Notification.pdf […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் புலி இறந்ததால்… சோகமாக சுற்றிய குட்டிபுலிகள்… மீட்ட வனத்துறையினர்…!!

தாய் புலி இறந்த துக்கத்தில் அதை சுற்றி சுற்றி  சோகமாக வந்த குட்டிபுலிகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்(வெளி மண்டலம்) சிங்கார வனச்சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண்புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு நேரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனி நீங்க ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… அரசின் புதிய அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைக்கு செல்ல இயலாதவர்கள் அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை அனுப்பி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் நடமாட இயலாத நிலையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல்நல குறைபாடு அல்லது வயது மூப்பு காரணமாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை பெற தகுதியான ஒருவரை ரேஷன் கடையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ரேஷன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றம் 1838 மரங்களை வெட்ட அனுமதி… என்ன காரணம்?…!!!

ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக 1,838 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. ஆனால் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டு ஆசைக்காதல்…. காதலி சொன்ன செய்தியால்…. காதலன் செய்த செயல்…!!

வாலிபர் ஒருவர் தன் காதலி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிப்பவர் சிவா என்பவரின் மகன் சந்தோஷ்(26). இவர் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கேரளாவைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணாண சுவேதா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சுவேதா தன்னுடைய காதலன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எல்லாமே நாடகம்” தாலி கட்டும் நேரத்தில்…. எழுந்த பெண் போட்டோவுடன் வெளியிட்ட காரணம் ….!!!

தாலி கட்டும் நேரத்தில் கொஞ்சம் பொறுங்கள் என் காதலன் வருவான் என்று கூறி மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ருந்தனர். திருமணத்தின்போது மணமேடையில் மணமக்கள் இருந்தனர். அப்போது அவர்களின் குடும்ப முறைப்படி திருமணத்திற்கு சம்மதமா என மாப்பிள்ளை கேட்க, மணப்பெண் அதற்கு சம்மதம் இல்லை என்று கூறியதோடு தன் காதலன் வருவான் நான் அவனுடன் செல்வேன் என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திருமணத்தை நிறுத்திய மணமகள்….. இதுதான் காரணம்…. திடீர் திருப்பமாய் வெளியிட்ட ஆடியோ… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!

சமீபத்தில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது முறைப்படி திருமண மேடையில் வைத்து மூன்று முறை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும். அதன் பிறகு தான் தாலி கட்ட முடியும். ஆனால் மூன்றாவது முறை பிரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிறுத்துங்க…!”தாலி கட்டாதீங்க” என் காதலன் வருவான்…. நம்பிய பெண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா ?

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண்ணின் காதலன் வராததால் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரியிலுள்ள மட்டக்கண்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த்-பிரியதர்ஷினி இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணத்தன்று மணப்பெண் கூறுகையில், ”  கொஞ்சம் பொறுங்கள், இப்போது என்னை திருமணம் செய்ய என் காதலன் வருவான். எனக்காக அவரது திருமண உறவை முறித்த அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.உங்களை திருமணம் செய்து கொண்டு அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

கொஞ்சம் WAIT பண்ணுங்க… காதலன் வருகின்றான்…. மனமேடையை அதிரவைத்த பெண் …!!

ஒரு மணி நேரம் பொறுங்கள் என் காதலன் வருகிறான் என்று உதகையில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள  மட்டகண்டி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவருக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாட்டையடுத்து எளிய முறையில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மணமேடையில் ஆனந்த் பிரியதர்ஷினிக்கு தாலிகட்ட முயன்றபோது பிரியதர்ஷினி தாலி கட்டுவதை நிறுத்த சொன்னார். பின்னர் கேட்டதற்கு ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முதுமலை புலிகள் சரணாலயத்தை திறக்க சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட திறந்துவிட வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா  தளர்வுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், கேளிக்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து  விதிக்கப்பட்டு வருகிறது. எனவே அவற்றைச் சார்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை சரணாலயம் திறக்கப்படாததால் அது சார்ந்த தொழிலை நம்பி உள்ள வாகன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் பெயரிலேயே மோசடியா?… என்னப்பா இது கொடுமையா இருக்கு… இனி எல்லாரும் உஷாரா இருங்க…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கி அதன் மூலம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறும்போது, “எனது பெயரில் ஒரு போலியான மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலமாக ‘ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’என்று நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்ட அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் நீலகிரி மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் மூடல் – 50 ஆயிரம் விவசாயிகள் பாதிப்பு…!!

பசுந்தேயிலை கொள்முதல் செய்ய கோரி முற்றுகை போராட்டம். ஒரு கிலோ பசும் தேயிலை 30 ரூபாய் 50 காசாக விலை நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் 50 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலை தொழிற்சாலைகளை திறந்து பசும் தேயிலையை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கார் ஓட்டி பழக சென்ற பெண்…. பயிற்சியாளர் செய்த செயல்…. காவல் நிலையத்தில் புகார்….!!

 கார் ஓட்டி பழக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த  பயிற்சியாளர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருசக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்றுக்கொடுக்கும் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளது. அங்கு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனம் ஓட்டுவதர்கு  பயிற்சி பெற்று சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்திற்கு, விண்ணப்பித்து பெற்று  கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனத்துறையினரின் எச்சரிக்கை பலகைகள் வேகமாக செல்வதால் விலங்குகள் உயிரிழப்பு…!!

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் உணவு பொருட்களை எடுப்பதற்காக சாலையின் குறுக்கே ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஓடும்போது அதிவேகமாக வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் சாலை […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி கேரட்டிற்கு போதுமான விலை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிலோ கேரட் 90 விலை போவதால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் கேரட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கொரோனா ஊரடங்கால்  கடந்த சில மாதங்களாக கேரட் விலை கடுமையாக சரிந்து இருந்த நிலையில் தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விலை போகிறது. உதகையின் சுற்றுவட்டார […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெர்ரி பூ..!!

நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஜெர்ரிப்பூக்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர். குளிர்ப் பிரதேசங்களான சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் காணப்படும் இந்த ஜெர்ரி பூ மரங்கள் தமிழ்நாட்டில் பசுமை போர்த்திய கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளன. இளம் சிகப்பு நிறத்தில் உள்ள செர்ரிப் பூக்கள் மரங்களில் பூத்துக் குலுங்கும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிறமான ஜெர்ரிப்பூ தற்போது பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு தினமும் 50 இ- பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும்…!!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை காண ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் E-Pass பெறவேண்டும் என்றும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மக்கள் எளிதில் E-Pass பெற அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்தால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூண்டு விவசாயத்தில் அசத்தும் எம்.பி.ஏ. பட்டதாரி…!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் எம்.பி.ஏ. படித்தும் உரிய  சம்பளத்தில் வேலை கிடைக்காததால் தனது சொந்த நிலத்தில் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தோடு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கி வருகிறார். கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர் பாரம்பரிய விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மகன் அபிமன்யு எம்.பி.ஏ. படித்து முடித்து கோவை சென்னை உட்பட பெருநகரங்களில் பணி கிடைத்தும் உரிய ஊதியம் கிடைக்காததால் விரக்தியில் ஆழ்ந்திருந்தார். இன்நிலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து சென்ற பாலம் மரங்களை கொண்டு பொதுமக்களே பாலம் அமைப்பு ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு மாற்றாக கிராம மக்களே ஒன்று சேர்ந்து மரங்களை கொண்டு பாலம் அமைத்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்தது. இதில் தேவலா பகுதியில் ஒரே நாளில் பெய்த கன மழையில், புளியம்பாறை  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. தொடர் மழையால் அங்கு பாலம் அமைக்க முடியாத நிலையில் வருவாய் துறையினர் மற்றும் நெல்லியாளம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை விவசாயி மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி..!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேயிலை விவசாயின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, படுக சமுதாயத்தின் முதல் பெண் ஐஏஎஸ் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குள கிராமத்தைச் சேர்ந்த சுந்தரன் சித்ரா தேவி தம்பதியின் ஒரே மகள் மல்லிகா. சிறுவயது முதலே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த மல்லிகா, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். மூன்று முறை முயற்சி செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிக மழை பெய்ய வாய்ப்பு …!!

கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். குளச்சல் முதல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 150 பேரிடர் மீட்பு குழுவினர் 6 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 250க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

”குளச்சல் – தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும்”

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும் கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – காலம்புழா அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் விழுந்த மரங்களால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான […]

Categories

Tech |