Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசுத்தமான கிணற்று நீர்…. நோய் தொற்று அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அசுத்தமான நீர் கலந்த   குடிநீர் கிணற்றை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காந்தி நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மக்கள் அளித்த புகாரின் பேரில் அரசாங்கம் ஜே.ஜே. எம். திட்டத்தின் மூலம் கிராமத்தில்  உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கிணற்றின் மேல் மூடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடுமையான குளிர்…. கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்…. வாகன ஓட்டிகளின் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் கடுமையான  குளிர் நிலவுவதால்  சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பலத்த காற்று வீசியது. இதனால் அப்பகுதிகளில் கடுங்குளிர் நிலவியுள்ளது.இதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு  வரும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்து பூக்களை கண்டு ரசித்துள்ளனர். ஆனால் கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளால்  நீண்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  மேலும் ஒரு மாவட்டத்தில்… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது […]

Categories
மாவட்ட செய்திகள்

தேயிலை செடியில் கொப்புள நோய்…. கவலையில் நீலகிரி விசாயிகள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த மாவட்டத்தில் 60,000 சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தற்போது மழையுடன் கூடிய தட்பவெட்ப நிலை நிலவுவதால் தேயிலை செடியின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு கொப்புள நோய் தாக்கி வருகிறது.இந்த நோய் இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்த்தில் தாக்குவதால் 50% வரை மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இதுகுறித்து தேயிலை […]

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா வந்த 16 பேர்…. வழியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலமான பெங்களூரைச் சேர்ந்த ஹரிஷ்குமாரின் வேனில் 16 நபர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இந்த வேனை ஹரிஷ்குமார் ஓட்டி வந்தார். இதனையடுத்து அனைவரும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு வேனில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் வழியாக மீண்டும் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் சில்வர் கிளவுட் வனத்துறை சோதனைச்சாவடியை கடந்த போது திடீரென்று டிரைவர் தன் கட்டுபாட்டை இழந்ததால் வேன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செலவுக்காக வாங்கிய பணம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் கூலி தொழிலாளியான கிறிஸ்டோபர் என்பவரது வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து நாசப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாக்க முயன்ற கரடி…. எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

வளர்ப்பு நாய் கரடியிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குஞ்சப்பனை பகுதியில் விவசாயியான ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பப்பி என்கிற நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் ராமராஜ் விவசாயம் செய்து கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் தாய் கரடி வெளியே வந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராமராஜ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த போது கரடி அவரை தாக்க முயன்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மயில், வண்ணத்துப்பூச்சி…. கண்ணைக் கவரும் அழகு…. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பூங்கா….!!

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் இரண்டாவது சீசன் அன்று பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சியாக வைக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ரசித்து செல்கின்றனர். இதையடுத்து பெரணி இல்லம் அருகில் 2000 பூத்தொட்டியில் கொண்டு வட்ட வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பூங்கா நுழைவு வாயிலில் இருபுறமும் மேரி கோல்ட் செடிகளில் மலர் பூத்து குலுங்கியது. ஆனால் தொடர் கனமழையின் காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கியதால் அந்த செடிகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்த புள்ளிமான்…. கர்நாடக பேருந்தால் நடந்த விபரீதம்…. நீலகிரியில் சோகம்…!!

கர்நாடக அரசு பேருந்தில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து மைசூரு நோக்கி கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து மாக்கமூலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மூங்கில் காட்டில் இருந்து வேகமாக ஓடிவந்த புள்ளிமான் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயற்சித்த போதும், புள்ளிமான் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பப்ஸ்”-ல் இருந்த புழு…. ஏளனமாக பதிலளித்த உரிமையாளர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புழு இருந்த பப்ஸ் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுடன் அப்பகுதியில் இருக்கும் பேக்கரிக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது மகன் சாப்பிடுவதற்காக ராஜா ஒரு பப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் ஊழியர் கொண்டு வந்து கொடுத்த பப்ஸில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா பேக்கரி உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் பப்ஸில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு” அங்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு…. டி.ஐ.ஜி. தலைமையில் தீவிர விசாரணை….!!

ஜெயலலிதா அம்மாவின் கார் டிரைவர் விபத்து தொடர்பாக டி.ஐ.ஜி. தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு சொந்தமாக தேயிலை எஸ்டேட் இருக்கிறது. கடந்த 2017-ஆம் வருடம் ஏப்ரல் 24-ம் தேதி அங்கு வேலையில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தனர். மேலும் அந்த கும்பல் எஸ்டேட்டில் நுழைந்து அங்கு இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சேலம் மாவட்டம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சாலையில் படுத்து உருண்ட வாலிபர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

குடிபோதையில் வாலிபர் சாலையில் உருண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கமர்சியல் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில் குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் திடீரென அந்த சாலையின் நடுவே படுத்து கொண்டார். அப்போது வாலிபர் தனக்கு மதுபானம் வாங்கித் தர வேண்டும் என கூறிக்கொண்டே சாலையில் உருண்டு கொண்டிருந்தார். இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கூடலூர் 1-ம் மைல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் பஞ்சராகி நடுவழியில் நின்று விட்டது. இதனால் பயணிகள் வேறு வாகனங்களில் ஏறி மீண்டும் கூடலூருக்கு சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது அரசு பேருந்தின் உதிரி பாகங்கள் மிகவும் பழுதடைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மரம்….. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சாலையில் முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ் நாடுகாணி என்ற இடத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலின் போது…. கடித்து கொன்ற சிறுத்தைபுலி…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

பசு மாடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைப்புலி ஒன்று அடிக்கடி புகுந்து அங்கு வளர்த்துவரும் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்டவைகளை கடித்துக் கொன்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தைப்புலி தேயிலை செடிகளுக்கு அருகில் இருந்து அங்கு வருபவர்களை தாக்க முயல்கிறது. இதனால் உயிர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இதோட அட்டகாசம் தாங்க முடியல” தொழிலாளர்கள் அளித்த தகவல்…. விரட்டியடித்த வனத்துறையினர்….!!

தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் பலர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் கோட்டபாடியில் காட்டு யானைகள் புகுந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதுகுறித்து அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தொழிலாளர்களின் குடியிருப்பு முற்றுகையிட்ட காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்…. பிடிபட்ட ஆட்கொல்லி புலி…. நீலகிரியில் பரபரப்பு…!!

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு புலியை வனத்துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஸ்ரீ, மதுரை போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்த புலி 4 பேரை அடித்து கொன்று விட்டது. இந்நிலையில் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்குடி பகுதியில் புலி சாலையை கடந்தபோது வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தினார். ஆனாலும் புலி அங்கிருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்து விடும்….. சுற்றி திரிந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று புகுந்து விட்டது. இந்த காட்டு யானை தாக்கியதால் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் காட்டு யானை ஒன்று சாம்ராஜ் எஸ்டேட் பகுதி வழியாக தூதுர்மட்டம் மகாலிங்கா காலனியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

21 நாட்களுக்கு பின்னர் பிடிபட்ட டி-23 புலி…. மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது….!!!

நீலகிரி மாவட்டத்தில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ள டி23 புலி சிகிச்சைக்கு பின்னர் மைசூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம், மசினகுடி மற்றும் கூடலூரில், 4 மனிதர்களை கொன்ற புலியை பிடிக்க கடந்த 21 நாட்களாக அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நேற்று இரவு அதிகாரிகளிடம் புலி சிக்கியது. இதையடுத்து புலிக்கு அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். மயக்க ஊசி செலுத்திய பின்னர் புலி தப்பியதால் புலியை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் 2 முறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 21 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு… இன்று பிடிப்பட்டது டி-23 புலி….!!!

நீலகிரி மாவட்டம் மன்னார்குடியில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி வந்த T-23 புலியை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தப்படும் தப்பியோடிய புலி இன்று மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நான்கு பேரையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொண்டுள்ள இந்த புலியை கடந்த 21 நாட்களாக பிடிப்பதற்கு வனத்துறையினர் பெரிதும் போராடி வந்தனர். 21 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு புலி உயிருடன் பிடிபட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. முறிந்து விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரம் இருக்கும் மரம் முறிந்து விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இடம்பெயர்ந்து வந்த புலி…. பல்வேறு குழுக்களாக கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

புலி இடம்பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழி கண்டி பகுதியில் 18-ஆவது நாளாக வனத்துறையினர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோழி கண்டியிலிருந்து ஓம்பெட்டா வனப்பகுதிக்கு புலி இடம் பெயர்ந்து விட்டது. இதனால் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனப்பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து புலி இடம்பெயர்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலா வரும் வனவிலங்குகள்….. சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை…. வனத்துறையினரின் முயற்சி…!!

வனவிலங்குகளுக்கு இடையூறாக அளிக்கக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மசனகுடி நோக்கி செல்லும் சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது வாகனங்களை நிறுத்தினால் காட்டு யானைகள் கோபத்தில் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை பின்பற்றி கவனமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பாலத்தின் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளையும், சிறிய மறைமுக விளைவுகளையும் கொண்டுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் குன்னூர் பகுதியில் இருக்கும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலத்தின் ஓரத்தில் நின்று அருவியின் பின்னணியில் புகைப்படம் எடுக்கின்றனர். இவ்வாறு ஆபத்தை உணராமல் பாலத்தின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து….. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அரசு பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து அரசு பேருந்து மசனகுடி நோக்கி புறப்பட்டுள்ளது.  இந்த பேருந்தின் டயர் பழுதாகி நடுவழியிலேயே நின்று விட்டது. இதனால் பொதுமக்கள் பாதியிலேயே இறங்கி விட்டனர். இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் இயக்குவதால் அடிக்கடி பேருந்து பாதியிலேயே நின்று விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேருந்துகள் பழுதடைந்து நடுவழியில் நிற்பதால் விபத்து ஏற்படும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் விவசாயிகளின் புதிய முயற்சி…. விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் கிணறுகள்….!!!!

தமிழகத்தில் நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பிளாஸ்டிக் கிணறுகளை அதிக அளவில் அமைத்து வருகின்றனர். தேயிலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலை மாவட்டத்தில் பெரும்பாலான காய்கறி தோட்டங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாததால் மழையை நம்பியே விவசாயம் செய்யக்கூடிய கட்டாயத்தில் உள்ளார்கள்.எனவே தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் மலைப்பாங்கான பகுதிகளில் கிணறுகளை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்து விவசாயம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதருக்குள் பதுங்கி இருக்கிறதா…? புலியின் தலையில் காயம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தேடப்படும் புலியின் தலையில் காயம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியில் வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய புலிகளின் உருவங்கள் தேடப்படும் புலி இல்லை என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது தேவன்-1 பகுதியில் பதுங்கி இருந்த புலியினை ஆய்வு செய்த போது வயது முதிர்வு காரணமாக அது இரையை வேட்டையாட முடியாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. சேதமான வாகனங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராணுவ குடியிருப்புக்குள் புகுந்த காட்டெருமைகள் வாகனங்களை முட்டி சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பேரக்ஸில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் குடியிருப்பு பகுதிக்குள் 2 காட்டெருமைகள் நுழைந்துவிட்டது. இந்த காட்டெருமைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தியதோடு, அதிகாலை வரை அங்கேயே முகாமிட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் ராணுவ குடியிருப்பில் நுழைந்த காட்டெருமைகளை அங்கிருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாயை பிரிந்த கடமான்…. தொழிலாளர்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தனியாக தவித்த கடமானை வனத்துறையினர் மீட்டு பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பாக்கோரை கிராமத்தில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் எழுந்திருக்க முடியாமல் கட மான் ஒன்று படுத்துக் கிடந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கட மானை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து தாயை பிரிந்ததால் 1 1/2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. ஆட்சியரின் நேரடி ஆய்வு…. நிர்ணயிக்கப்பட இலக்கு…!!

மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 5-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக மொத்தம் 312 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 32,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தங்க சுரங்கத்தில் இருக்கும் பள்ளங்கள்….. மீட்கப்பட்ட எலும்பு கூடு…. வனத்துறையினரின் தகவல்…!!

தங்கச் சுரங்க பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த காட்டு யானையின் எலும்புகூடு மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா நாடுகாணி இடையே ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க சுரங்கம் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தச் சுரங்கத்தில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அதன் தாயுடன் சேர்த்து விட்டனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறையினர் பள்ளத்தில் புதைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலை ரயில் பயணம்….. திரண்ட சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மலை ரயிலில் பயணிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயிலில் செல்ல முதல் வகுப்புக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்புக்கு 295 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலை ரயிலில் பயணிப்பதற்காக சுற்றுலா பயணிகள் திரண்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையால் மலை ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சீரமைப்பு பணிகள் முடிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய குரங்கு….. வலையால் நடந்த விபரீதம்….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வலையில் சிக்கிய குரங்கு குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காத்துகுளி முருகன் கோவில் மைதானத்தில் பந்து வெளியே செல்லாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் வலை அமைத்து உள்ளனர். இந்நிலையில் குரங்கு ஒன்று இந்த வலையில் சிக்கி வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு உள்ளது. மேலும் அதன் கழுத்து மற்றும் கால்களை கயிறு இறுகியதால் குரங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தகர்க்கப்பட்ட ராட்சத பாறை….. தொடங்கிய மலை ரயில் பயணம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தண்டவாளத்தில் கிடந்த பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பிறகு மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஹல்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விட்டது. இதனால் ரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டவாளத்தில் கிடந்த பாறையை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த ராட்சத பாறையை ஊழியர்கள் வெடிவைத்து தகர்த்து விட்டனர். இதனை தொடர்ந்து சீரமைக்கப்பட்ட மலை ரயில் பாதையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவாகிய உருவங்கள்…. ஏமாற்றமடைந்த வனத்துறையினர்…. அதிகாரியின் தகவல்…!!

14-வது நாளாக புலியை தேடும் பணியானது தோல்வியில் முடிவடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்திய கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகாததால் வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். சுமார் 14-ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக தேடியும் புலி  தென்படவில்லை. எனவே மசினகுடி முதுமலை எல்லையில் அதிரடி படை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாயார் பகுதியில் ஒரு மாட்டை புலி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெயர்ந்து கிடக்கும் சாலை…. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளது. இங்கு செல்லும் சாலை தொடர் மழையால் பெயர்ந்து விட்டது. இதனால் சோதனைச்சாவடி அருகே தடுப்புகள் அமைத்து தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் வழியானது அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்த பாறை….. மலை ரயில் பயணம் ரத்து…. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…!!

மழை காரணமாக பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஹில்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தில் பாறை ஒன்று உருண்டு விழுந்து விட்டது. மேலும் மண்சரிவால் மரமும் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்து விட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 111 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு மலை ரயில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலா வரும் வனவிலங்குகள்….. இடையூறு அளிக்கும் சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகளுக்கு இடையூறு அளிக்க கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த இடத்தில் இதமான காலநிலையும், லேசான மழை பெய்வதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரத்தில் புற்கள் பசுமையாக காணப்படுகிறது. இதனால் மான்கள் மற்றும் காட்டெருமைகள் சாலையின் இருபுறத்திலும் இருக்கும் புற்களையும் மேய்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

புலியை கொல்வது தீர்வல்ல…. தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிடிங்க…. ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்த கமல்….!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்காக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளன. மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்கொல்லி புலியின் அட்டகாசம்…. 10வது நாளாக தேடுதல் பணி…. ட்ரோன் மூலம் தொடரும் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றுள்ளது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக,கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணித்து வருகின்றனர். இதனிடையில் முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

புலியை கொல்ல கூடாது…. பிடித்து வனத்தில் விடுங்கள் – வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மாதன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது T3 புலி அவரை தாக்கி சடலத்தை உண்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த புலி ஏற்கனவே கூடலூரில் 3 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனித உயிருக்கு அச்சுறுத்தலான அந்த புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் பிடிபடாத அந்த புலி ஞாயிற்றுக்கிழமை அன்று மேபீல்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்த போது…. கடித்து குதறி கொன்ற புலி… மேலும் ஒருவர் பலியானதால் மக்கள் அதிர்ச்சி!!

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடியில் ஆடு மேய்த்த நபர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த 13 வயதான ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியும், கூண்டு வைத்தும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. மேலும் கேரளாவிலுள்ள குழுவினரும், அனுபவமிக்க வீரர்களும் இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாயமான பள்ளி மாணவிகள்….. ஏமாற்றி அழைத்து சென்ற சிறுவர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமிகளை கடத்தி சென்ற 2 சிறுவர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் மற்றொரு பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி விட்டது. இந்நிலையில் காதல் ஜோடிகள் அடிக்கடி வெளியில் சென்று பழகி வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் சிறுமிகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற 4 பேரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திலேயே…. 100% தடுப்பூசி செலுத்துவதில்…. இந்த மாவட்டம் சாதனை…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்களே கடலுக்கு போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஆப்பு…. தடுப்பூசி போட்டால் தான் சரக்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக படிப்படியாக பாதிப்பு குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.  இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களே… “உடனே இதை செய்யுங்க”… அப்போ தான் மதுபானம்… ஆட்சியர் அதிரடி!!

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா 2ஆவது அலை சற்று குறைந்தாலும், 3ஆவது அலைக்கு தயாராக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இதற்கிடையே அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு மக்களிடம் வலியுறுத்தி வருகின்றது.. மாவட்ட நிர்வாகமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.. அதன்படி மக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உதகையில் இன்று பூங்காக்கள் திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் செப்-6  வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படவுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தனி மனித இடைவெளியை கட்டாயம் […]

Categories

Tech |