ஒரே ஆண்டில் 3வது முறையாக வைகை அணை நிரம்பவுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுமார் 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்வது வழக்கம். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து […]
