மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாலூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால் நீர்த்தேக்கத் தொட்டி கொண்டுவருவதில் காலதாமதம் […]
