தண்ணீர் குடிப்பதற்காக அணைப் பகுதிக்கு வந்த யானை சேற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளது. கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திலுள்ள பெத்திக்குட்டை, மயில் மொக்கை வனப்பகுதியில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது ஆறு வயதிற்குட்பட்ட பெண் யானை தண்ணீருக்குள் இறந்து கிடந்துள்ளது. இந்த தகவலறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வன அதிகாரிகள் நேரில் சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர் யானையை கரைக்கு மீட்டு வந்து கால்நடை மருத்துவர் தியாகராஜன் […]
