ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலபுலியூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜெயசக்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லாநத்தம் கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் தாத்தாவுடன் ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற ஜெயசக்தி ஏரியில் விளையாடி கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென ஜெய்சக்தி காணாமல் போனதால் […]
