கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலை பார்த்த போது முருகன் அவரது மனைவி செண்பகத்திடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். பின்னர் முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து செண்பகம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் […]
