ஆம்புலன்ஸில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 மருத்துவ அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது ஜெயலெட்சுமியுடன் மருத்துவ அவசர ஊர்தியில் அவரின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் அம்பிகா ஆகியோர் சென்றுள்ளனர். […]
