விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார் அடுத்துள்ள ராதாபுளி பஞ்சாயத்து கோபாலபட்டினம் கிராமத்தில் விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராதாபுளி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரப்பு கட்டுதல், மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டுநீர்ப்பாசனம், பண்ணைகுட்டை அமைத்தல், கோடைகால உழவு, மண் பரிசோதனை, மண்புழு உரம் தயாரிப்பு, பசுந்தாள் உரங்கள் […]
