புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நரிக்குறவர்கள் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் மக்கள் சுமார் 58 வீடுகளில் 100 க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாசி, ஊசி, மணி தயாரித்து பிழைப்பிற்காக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தனிநபர் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் வாங்கி திருவிழாக்களில் விற்பனை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதனையடுத்து […]
