நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை காக்க 5 வெள்ள மீட்புக் குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயாராக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி […]
