சிவகங்கையில் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பணியாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் பிடி மற்றும் சுருட்டு […]
