போலீஸ் காவலில் இருந்த கருப்பினத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததால் அமெரிக்காவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டேனியல் புரூடி என்பவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் கடந்த வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடந்தது. அந்தப் பேரணி நீதிமன்ற வீதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சட்டவிரோதமாக கூடுவதை தவிர்த்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். […]
