தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும் சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும் படி தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்பந்திப்பதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
