அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்துவிட்டது. இந்த உட்கட்சி பூசல்களால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவால் சரிவர கடமையை ஆற்ற முடிவதில்லை. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே வந்தது. இதனால் ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இருப்பினும் இபிஎஸ் நிரந்தர […]
