தோனி தனது ஓய்வுக்கு பின் இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து, பல சாதனைகளை செய்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளராகவோ […]
