தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கடற்கரை பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் எனவும், ஆமைகள் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அண்ணா நினைவிடத்தில் உள்ள வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் தமிழக அரசால் இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டு […]
