பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார். பீகார் மாநில முதல்வராக 8ஆவது முறையாக பதவி ஏற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். பாட்னாவில் ராஜ் பவனில் நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சௌஹான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்.
