மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதையடுத்து அவர் பேசியதாவது “அரசியலுக்கு பலர் பல காரணங்களுக்காக வந்து இருக்கலாம். இதற்கிடையில் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி, பிறகு அதனை வேண்டாம் என எண்ணி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடவேண்டும் எனும் எண்ணத்தில்தான். நான் அமைச்சரான பிறகு இதுபோன்ற நிகழ்ச்சிகள் என் தொகுதியில் […]
