Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 13…!!

சூன் 13 கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். 1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. 1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. 1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1625 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 12…!!

சூன் 12  கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். 1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது. 1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 11…!!

சூன் 11 கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது.631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர். 786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட கிளர்ச்சி அப்பாசியர்களால் நசுக்கப்பட்டது. 1011 – லொம்பார்டு கிளர்ச்சி: பாரியின் கிரேக்கக் குடிமக்கள் லோம்பார்டி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 10…!!

சூன் 10  கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். 1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். 1329 – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். 1523 – டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன. 1782 – சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார். 1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 9…!!

சூன் 9  கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். 68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான். 1534 – இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 8…!!

சூன் 8  கிரிகோரியன் ஆண்டின் 159 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 160 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 452 – அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார். 632 – இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார். 1042 – எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். 1405 – யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். 1783 – ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 7…!!

சூன் 7  கிரிகோரியன் ஆண்டின் 158 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 159 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 421 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது. 879 – திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார். 1002 – இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். 1099 – முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது. 1494 – புதிய உலகத்தை இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1692 – யமேக்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை காயமடைந்தனர். 1832 – கனடாவில் கியூபெக்கில் அயர்லாந்துக் குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட ஆசிய வாந்திபேதி நோய் காரணமாக 6,000 பேர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 6…!!

சூன் 6 கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார். 1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது. 1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.[1] 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.[2] 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. 1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 5…!!

சூன் 5  கிரிகோரியன் ஆண்டின் 156 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 157 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச் சுவரைத் தகர்த்தனர். 754 – பிரீசியாவில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு பாகான்களால் கொல்லப்பட்டார். 1829 – பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது. 1832 – லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது. 1849 – டென்மார்க் முடியாட்சி அரசியலை ஏற்றுக் கொண்டது. 1851 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்வின் அடிமை முறைக்கெதிரான அங்கிள் டாம்’ஸ் கேபின் என்ற 10-மாதத் தொடர் வெளிவர ஆரம்பித்தது. 1862 – தெற்கு வியட்நாமின் சில […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 4…!!

சூன் 4  கிரிகோரியன் ஆண்டின் 155 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 156 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 210 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1561 – இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை. 1615 – சப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின. 1707 – ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.[1] 1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆத்திரியப் படைகளைத் தோற்கடித்தது. 1760 – நியூ இங்கிலாந்து தோட்டக்காரர்கள் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் அக்காடியர்களால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை மீளக் கைப்பற்றுவதற்காக அங்கு வந்து சேர்ந்தனர். 1783 – மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 3…!!

சூன் 3 கிரிகோரியன் ஆண்டின் 154 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 155 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 350 – நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான். 713 – பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு பேரரசராக முடிசூடினார்.[1] 1140 – பிரெஞ்சுக் கல்வியாளர் பியேர் அபேலார்டு சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். 1326 – உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது. 1539 – எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். 1834 – இலங்கை, கொழும்பு நகரில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழருக்கும், சோனகருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.[2] 1839 – சீனாவில் பிரித்தானிய வணிகர்களிடம் இருந்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 2…!!

சூன் 2 கிரிகோரியன் ஆண்டின் 153 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 154 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது.1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர். 1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர். 1805 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர். 1835 – பி. டி. பர்னம் ஐக்கிய அமெரிக்காவிற்கான தனது முதலாவது வட்டரங்கு சுற்றை ஆரம்பித்தார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 1…!!

சூன் 1 கிரிகோரியன் ஆண்டின் 152 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 153 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1215 – மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார். 1533 – ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார். 1535 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைகள் துனிசுவில் உதுமானியரைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர். 1649 – பிலிப்பீன்சு, வடக்கு சமரில் எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 1660 – மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார். 1670 – இங்கிலாந்தின் டோவர் நகரில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு, பிரான்சின் பதினான்காம் லூயி ஆகியோருக்கு இடையில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 31…!!

மே 31 கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார். 1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது. 1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1][2] 1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார். 1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது. 1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 30…!!

மே 30 கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர்.1381 – இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது. 1416 – திரிபுக் கொள்கைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிராகா நாட்டு மெய்யியலாளர் ஜெரோமி காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தினால் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1431 – நூறாண்டுப் போர்: பிரான்சிய வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள். 1536 – இங்கிலாந்தின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 29…!!

மே 29 கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. 1328 – நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1416 – கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது. 1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது. 1660 – இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். 1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 1780 – அமெரிக்கப் புரட்சிப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 28…!!

மே 28  கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. 1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார். 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 27…!!

மே 27  கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.[1] 1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார். 1199 – ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். 1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். 1799 – ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் படைகள் கனடாவில் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றின. 1837 – இலங்கையில் கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கினால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 26…!!

மே 26  கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 17 – செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான். 451 – ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. 946 – இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். 961 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 25…!!

மே 25  கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 240 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டது.[1] 1085 – காசுட்டில் மன்னர் ஆறாம் அல்போன்சோ டொலேடோவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.[2] 1521 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு மார்ட்டின் லூதரை சமயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்.[3] 1644 – மிங் சீனத் தளபதி வூ சங்குய் மஞ்சு ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டணியை ஏற்படுத்தினார். மஞ்சுப் படைகள் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிச் செல்லுவதற்காக சீனப் பெருஞ்சுவரின் சன்காய் பாதைகளைத் திறந்து விட்டார். 1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் “ஆட்சிக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 24…!!

மே 24 கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1218 – ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். 1276 – மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். 1487 – இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான். 1607 – 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும். 1626 – பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 23…!!

மே 23 கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.1498 – திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. 1633 – இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[1] 1788 – தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது. 1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத் தன்னை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 22…!!

மே 22  கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 760 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது. 1200 – இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும் நார்மாண்டி போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். 1254 – பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 1370 – பிரசெல்சு நகரில் பெருந்தொகையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து யூத சமூகம் அங்கிருந்து வெளியேறியது. 1455 – ரோசாப்பூப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 21…!!

மே 21  கிரிகோரியன் ஆண்டின் 141 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 142 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர். 996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான். 1674 – யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார். 1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர். 1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. 1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 20…!!

மே 20  கிரிகோரியன் ஆண்டின் 140 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 141 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 325 – கிறித்தவத் திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச் சங்கம், நிக்கேயா பேரவை அமைக்கப்பட்டது. 1217 – இங்கிலாந்து லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார். 1497 – ஜான் கபோட் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக மெத்தியூ என்ற கப்பலில் புறப்பட்டார். 1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.[1] 1521 – பாம்பெலூனா நகரில் இடம்பெற்ற […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 19…!!

மே 19 கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது. 1499 – அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது. 1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு ஆண்களுடன் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 18…!!

மே 18 கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 332 – கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார். 872 – இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார். 1096 – முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர். 1268 – அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது. 1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. 1593 – மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது. 1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 17…!!

மே 17 கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. 1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார். 1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. 1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார். 1814 – நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக முடிசூடினார். 1814 – மொனாக்கோவின் ஆட்சி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 16…!!

மே 16 கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 946 – யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். 1527 – புளோரன்சு மீண்டும் குடியரசானது. 1532 – சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். 1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1739 – வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். 1770 – 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 15…!!

மே 15  கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது. 221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார். 392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார். 908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான். 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 14…!!

மே 14  கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். 1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார். 1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான். 1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். 1800 – ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாசிங்டன், டி. சி.க்கு மாற்றும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 13…!!

மே 13  கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன. 1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1656 – ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.[1] 1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[2] 1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 12…!!

மே 12 கிரிகோரியன் ஆண்டின் 132 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 133 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 233 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. 1191 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1551 – அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது. 1588 – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி ஆரம்பித்ததை அடுத்து பிரான்சின் மூன்றாம் என்றி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 11…!!

மே 11  கிரிகோரியன் ஆண்டின் 131 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 132 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது. 868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். 912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். 1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார். 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை அமெரிக்கக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 10…!!

மே 10 கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது. 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார். 1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்.. 1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார். 1534 – இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார். 1612 – ஷாஜகான் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தார். 1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது. 1688 – அயூத்திய இராச்சியத்தின் மன்னர் நாராய் தனது மகள் சுதாவதியை தனது முடிக்குரிய வாரிசாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 9…!!

மே 9 கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது.. 1386 – இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது. 1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார். 1612 – கண்டி மன்னர் செனரத்துடன் மார்செலசு டி பொசோடர் தலைமையிலான இடச்சுத் தூதுக்குழு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.[1] 1671 – அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். 1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1877 – உருமேனியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 8…!!

மே 8  கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார். 1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1842 – பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 7…!!

மே 7  கிரிகோரியன் ஆண்டின் 127 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 128 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 351 – உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 558 – கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா சோபியாவின் குவிமாடம் இடிந்து வீழ்ந்தது. 1664 – பிரான்சின் பதினான்காம் லூயி வெர்சாய் அரண்மனையை நிர்மாணிக்க ஆரம்பித்தார். 1697 – சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரின் நடுக்காலப் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. இது 18-ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது. 1832 – கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 1840 – ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 6…!!

மே 6  கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர். 1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர். 1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார். 1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய இந்தியாவின் அக்காலத்தையத் தலைநகரான பழைய கோவாவை அடைந்தார். 1659 – பிரித்தானிய இராணுவத்தின் ஒரு பகுதியினர் ரிச்சார்ட் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 5…!!

மே 5  கிரிகோரியன் ஆண்டின் 125 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 126 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. 1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். 1494 – கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். 1640 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1762 – உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. 1762 – கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோன் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 4…!!

மே 4 கிரிகோரியன் ஆண்டின் 124 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 125 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார். 1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார். 1626 – டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார். 1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது. 1799 – நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 3…!!

மே 3 கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. 1791 – ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. 1802 – வாசிங்டன், டி. சி. நகரமாக்கப்பட்டது. 1808 – சுவீடன் சுவீபோர்க் கோட்டையை உருசியாவிடம் இழந்தது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 2…!!

மே 2  கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். 1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. 1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். 1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமசு கோக் மதப்பரப்புனராக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 1…!!

மே 1  கிரிகோரியன் ஆண்டின் 121 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 122 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்.524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். 1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. 1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. 1576 – திரான்சில்வேனியா இளவரசர் இசுட்டீவன் பாத்தரி, அன்னா ஜாகியலனைத் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30…!!

ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. 1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது. 1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது. 1513 – ஆங்கிலேய முடியாட்சிக்குப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29…!!

ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டின் 119 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 120 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில்ல் சமரில் ஈduபட்டன. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் உயிரிழந்தனர். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 28…!!

ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 1603 – டச்சுத் தளபதி செபால்ட் டெ வீர்ட் என்பவனுக்கும் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியனுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.[1] 1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர். 1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 27…!!

ஏப்ரல் 27  கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். 629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். 711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். 1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் சமரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டன. 1521 – நாடுகாண் பயணி பெர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சுப் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 26…!!

ஏப்ரல் 26  கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). 1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர். 1721 – ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார். 1803 – பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் லாயிகில் நகரில் வீழ்ந்தன. 1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்னா நகரைக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 25…!!

ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டின் 115 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 116 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 775 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர். 799 – உரோமை மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார். 1607 – எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். 1644 – மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென், உழவர் கிளர்ச்சியை அடுத்துத் தற்கொலை செய்து கொண்டார். 1707 – எசுப்பானிய […]

Categories

Tech |