அக்டோபர் 4 கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். 1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். 1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. 1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின. 1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் […]
