நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், கன மழை பெய்வதற்கு முன்பே விவசாயிகள் இரண்டு நாட்களுக்குள் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் […]
