புரேவி புயல் காரணமாக நாளை கேரளா மக்களுக்கு ஆபத்து இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புரேவி புயலானது நாளை மறுதினம் அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த இரண்டு நாட்களுக்கும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
