மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பீட் எனும் இடத்தில் நாய்க்குட்டிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தில் 80 நாய்க்குட்டிகளை கடித்துக் குதறி கொன்ற 2 குரங்குகளை வனத்துறையினர் வலைவீசி பிடித்தனர். இதனிடையில் நாய் குட்டிகளை தூக்கிக் கொண்டு உயரமான கூரைகளில் தாவும் குரங்குகள் அங்கு இருந்து அவற்றை தள்ளிவிட்டு கொல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பின் நாய்களுடன் யுத்தம் நடத்தும் குரங்குகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் வெறித்தனமான 2 குரங்குகள் அடையாளம் காணப்பட்டு […]
