நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது. […]
