நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரத்திம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணேசன் உயிரிழந்து விட்டார். […]
