நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி நாகராஜபுரம் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் முறையாக 960, 192 மற்றும் 240 என மொத்தம் 1,392 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இந்த குடியிருப்புகளை பெற தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான மக்கள் இந்த குடியிருப்புகளை பெற விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர். […]
